திறமையின் காரணமாகவும் அறிவு தெளிவடையாத காரணத்தாலும் புத்தி சுவாதீனமில்லாததாலும், போதையின் விளைவாகவும் ஒருவர் புரியும் குற்றச்செயலை குற்றமாக கருத இயலாவிட்டாலும் அத்தகைய நபர்களிடமிருந்து, நம்மை காப்பாற்றி கொள்ளும் உரிமை நமக்கு இருக்கிறது.
உதாரணம்:
புத்தி சுவாதீனமில்லாமல் ராஜன், ராமசாமியை கொலை செய்ய முயற்ச செய்கிறார். ராஜன் மீது குற்றம் சாட்ட முடியாது. இருப்பினும் ராஜனிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ராமசாமி என்ன செய்தாலும் அதனை குற்றமாக கொள்ள முடியாது.
மனநலம் குன்றிய ஒரு நபர், முதலானவர்களின் செயலுக்கெதிராக, தனிநபர் தற்காப்பு உரிமைஒரு செயல், மற்றபடியாக ஒரு குறிப்பிட்ட குற்றமாகயிருக்கும்போது, இளமை, புரிந்துகொள்வதற்கான பக்குவக்குறைவு, மனநலக்குறைவு அச்செயலைச் செய்கின்ற நபருடைய மதுமயக்கத்தின் காரணத்தால், அல்லது அந்நபரின்பாலான தவறான கருத்து காரணத்தால் அக்குற்றமாக ஆகாதபோது, அச்செயலுக்கெதிராக, அச்செயல் அக்குற்றமாக இருந்தால் அவர் என்ன தனிநபர் தற்காப்பு உரிமையைக் கொண்டிருப்பாரோ, அதே தனிநபர் தற்காப்பு உரிமையை ஒவ்வொரு நபரும் கொண்டிருப்பார்.
எடுத்துக்காட்டுகள்
(a ) பைத்தியத்தின் தாக்கத்தின்கீழ் உள்ள z என்பவர், A என்பவரைக் கொல்ல முயற்சிக்கிறார்; z எக்குற்றத்திற்கும் குற்றவாளியல்ல.அனால், z நல்ல மனநிலையில் இருந்திருந்தால், A என்ன தனி நபர் தற்பதுகாப்பு உரிமையைக் கொண்டிருப்பாரோ, அதே தனிநபர் தற்காப்பு உரிமையை அவர் கொண்டிருப்பார்.
(b )எந்தஒரு வீட்டினுள் நுழைவதற்கு A என்பவருக்கு சட்டப்படி உரிமையுள்ளதோ, அந்த வீட்டினுள் அவர் இரவில் நுழைகிறார்.z என்பவர், நன்னம்பிக்கையில், A ஐ வீட்டில் ஒரு கன்னமிடுபவராகத் தவறாக நினைத்து அவரை தாக்குகிறார்.இங்கு, இந்த தவறான கருத்தின்கீழ் A ஐ தாக்குவதால் z எக்குற்றத்தையும் புரியவில்லை.அனால், z தவறான கருத்தின்கீழ் செயல்படாமல் இருந்திருந்தால், z க்கு எதிராக A க்கு என்ன தனிநபர் தற்காப்புரிமை இருக்குமோ, அதே தனிநபர் தற்காப்பு உரிமையை A கொண்டிருப்பார்.