ஒவ்வொரு நபருக்கும் தன்னுடைய உடலையும், பிறருடைய உடலையும் தாக்க கூடிய குற்றங்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் உரிமை உண்டு. இரண்டாவதாக தன்னுடைய சொத்துக்களையும், பிறருடைய சொத்துக்களையும் பாதிக்க கூடிய குற்றங்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் உரிமை உண்டு(சொத்து என்பது அசையும் பொருட்களையும், அசையாத பொருட்களையும் குறிக்கும். திருட்டு, கொள்ளை, சொத்துக்களை அழித்தல், வரம்பு மீறி ஆளுதல் ஆகியவை சொத்துக்களை சம்பந்தப்பட்ட குற்றமாகும்).
உடல் மற்றும் சொத்தின் தனிநபர் தற்காப்பு உரிமைசட்டப்பிரிவு 99 இல் உள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, பின்வருவனவற்றை தற்காப்பதற்கு ஒவ்வொரு நபருக்கும் ஒரு உரிமை உள்ளது.
முதலாவது:- மனித உடலைப் பாதிக்கின்ற ஏதாவதொரு குற்றத்திற்கு எதிராக அவரின் சொந்த உடல் மற்றும் யாரேனும் ஒரு பிற நபரின் உடலை ;
இரண்டாவதாக :- திருட்டு, கொள்ளை, வண்குரும்பு அல்லது குற்றமுறு அத்துமீறலைப் புரிவதற்க்கான ஒரு முயற்சியின் பொருள் வரையறையின்கீழ் வருகிற ஒரு குற்றமாக இருக்கிற, அவரின் அல்லது யாரேனும் ஒரு பிற நபரின் அசையும் அல்லது அசையாச் சொத்திற்கு எதிரான ஏதாவதொரு செயல்.