ஒருவருக்கு தீங்கு இழைக்க வேண்டும் என்ற குற்ற கருத்து இல்லாமல், நல்லெண்ணத்துடன் ஒரு மனிதர் அல்லது சொத்துக்கு தீங்கு ஏற்படுவதை தடுக்க அல்லது தவிக்க ஒரு காரியம் நடைபெறுகிறது. அப்போது தீங்கு ஏற்படும் என அறிந்தும் அந்த காரியத்தை செய்து தீங்கு நிகழ்ந்தால் அது குற்றமாகாது.
உதாரணம்:
தீ பற்றி வீடுகள் எரியும் போது தீ பரவாமல் தடுப்பதற்காக பக்கத்தில் உள்ள வீடுகளை கிருஷ்ணன் பிரித்து தள்ளுகிறான். மனித உயிர்களையும் சொத்துக்களையும் காப்பாற்றவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இந்த காரியம் செய்யப்படுகிறது. அபாயத்தை தடுப்பதற்காக கிருஷ்ணன் அக்கம் பக்கத்துக்கு வீடுகளை பிரித்தது சரி என்றால் அவன் மீது குற்றம் சுமத்த முடியாது.