சட்ட ரீதியான முறையில் சட்ட ரீதியான வழிகளைப் பற்றி சட்டத்திற்கு உட்பட்ட ஒரு காரியம் கருத்துடனும் கவனத்துடனும் நடைபெறுகின்றது. அப்படி காரியம் ஆகும்போது குற்ற கருத்தும் குற்றத்தைப்பற்றி தெளிவும் இல்லாமல் எதிர்பாராத விதமாக நிகழும் விபத்து அல்லது துன்பத்தை குற்றமாக கொள்ளப்படமாட்டாது.
உதாரணம்:
ராமன் மரம் வெட்டிக்கொண்டிருக்கிறான். கோடரியின் முனை திடீரென்று வழுக்கி பொய் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் மனிதனை தாக்கி கொன்று விடுகிறது. ராமனுடைய அஜாக்கிரதையினால் அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை என்றால் ராமனுடைய செயல் குற்றமற்றது.