ஒரு உத்திரவு அல்லது தீர்ப்பு நீதிமன்றத்தால் வெளியிடப்படுகிறது. அந்த தீர்ப்பு அல்லது உத்திரவு அமலில் இருக்கும்போது அதனை ஒட்டி செய்யப்படும் காரியங்கள் குற்றம் என்று கொள்ள அதிகாரம் கூட இல்லாதிருக்கலாம். உத்தரவின்படி நடப்பவர் நீதிமன்றத்திற்கு அத்தகைய அதிகாரம் இருக்கிறது என்ற நல்லெண்ணத்துடன் செயல்படுவதால் அந்த செயல் குற்றமாவதில்லை.