எந்தவொரு அபராதம் அல்லது அதனின் ஏதாவதொரு பகுதி செலுத்தப்படாமல் எஞ்சியுள்ளதோ அந்த அபராதம் அல்லது அதனின் பகுதி, தண்டனை விதிப்பு பிறப்பிக்கபடப்டதற்குப் பின்னர் ஆறு வருடங்களுக்குள் எந்தவொரு நேரத்திலும் மற்றும் அத்தண்டனை விதிப்பின் கீழ் அக்குற்றம் புரிந்தவர் ஆறு வருடங்களுக்கு மேற்பட்ட ஒரு நீண்ட காலத்திற்கான சிறைத்தண்டனைக்கு உள்ளாக வேண்டுமென்றிருந்தால் அதன்பின்பு அக்காலம் முடிவுறுவதற்கு முந்தையை எந்தவொரு நேரத்திலும் வசூலிக்கப்படலாம். மற்றும் அக்குற்றம் புரிந்தவரின் மரணமானது எந்தவொரு சொத்தை வசூலிக்கப்படுவதற்கு உள்ளாவதிலிருந்து விடுவிக்காதோ அந்தச் சொத்து அவரின் மரணத்திற்குப் பின்பு, அவரின் கடன்களுக்காக சட்டப்பூர்வமாக வசூலிக்கப்படுவதற்கு உள்ளாக வேண்டும்.