(1) சட்ட உட்பிரிவு (2) மற்றும் சட்ட உட்பிரிவு (3)களின் ஷரத்துக்களுக்கு உட்பட்டு, தற்போது அமலிலுள்ள ஏதாவதொரு பற சட்டத்தில் அல்லது நீக்கப்பட்ட ஏதாவதொரு அத்தகைய சட்டம் அல்லது ஏதாவதொரு சட்டமிடியற்றலின் காரணத்தால் அவ்விளைவைக் கொண்டிருக்கின்ற ஏதாவதொரு ஆவணம் அல்லது உத்தரவில் உ ள்ள “ஆயுட்கால நாடு கடத்தல்” என்பதன் ஏதாவதொரு குறிப்பு “ஆயுள் சிறைத்தண்டனைக்கான” ஒரு குறிப்பாகப் பொருள் கொள்ளப்பட வேண்டும்.
(2) குற்ற விசாரணை முறை (திருத்தச்) சட்டம், 1955 ( 26/1955) அமலுக்கு வருவதற்கு முன்பு விதிக்கப்பட்டிருக்கும் ஒரு கால அளவிலான நாடு கடத்தலுக்கான ஒரு தண்டனை விதிப்பு உள்ள ஒவ்வொரு நேர்விலும், அக்குற்றம் புரிந்தவர், அவர் அதே கால அளவிற்கான கடுங்காவல் சிறைத்தண்டனைக்கு தண்டிக்கப்பட்டிருக்கிறது போலவே அதே முறையடன் நடத்தப்படவேண்டும்.
(3) தற்போது அமலிலிருக்கும் ஏதாவதொரு பிற சட்டத்தில் ஒரு கால அளவிலான நாடு கடத்துதல் அல்லது ஏதாவதொரு குறுகிய காலத்திற்கான நாடு கடத்துதன் ( அவை என்ன பெயரால் அழைக்கப்பட்டாலும்) என்பது நாடு கடத்துதலுக்கான ஏதாவதொரு குறிடிப்பு விட்டுவிடப்பட்டதற்கு நிகராகக் கொள்ளப்பட வேண்டும்.
(4) தற்போது அமலிலிருக்கும் ஏதாவதொரு பிற சட்டத்தில் உள்ள “நாடு கடத்துதல்” என்பதற்கான ஏதாவதொரு குறிப்பானது:
(a) ஆயுட்கால நாடு கடத்துதலை குறிப்பதாக அவ்வெளிப்பாடு இருந்தால் அது ஆயுள் சிறைத்தண்டனைக்கான ஒரு குறிப்பாக பொருள் கொள்ளப்படவேண்டும்
(b) ஏதாவதொரு குறைந்த கால அளவிலான நாடு கடத்துதலை குறிப்பதாக அவ்வெளிப்பாடு இருந்தால் அது விட்டுவிடப்பட்டதற்கு நிகராகக் கொள்ளப்படவேண்டும்