சட்டப்பிரிவு 157 மற்றும் சட்டப்பிரிவு 130ல் எந்த புகலிடம், புகலிடமளிக்கப்பட்டவரின் மனைவி அல்லது கணவனால் கொடுக்கப்பட்டதோ அந்த புகலிட நேர்வில் உள்ளதை தவிர “புகலிடமளித்தல்” என்ற வார்த்தையானது ஒரு நபருக்கு தங்குமிடம், உணவு, குடிநீர் பணம், துணிமணிகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் அல்லது வாகன வசதி கொடுப்பதை அல்லது கைது செய்யப்படுவதைத் தடுபட்பதற்கு ஏதேனும் வழிகளால், இச்சட்டப்பிரிவில் எடுத்துரைக்கப்பட்ட அதே வகையிலானதாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் ஒரு நபருக்கு உதவி செய்தலை உள்ளடக்குகிறது.