குற்றம் புரிவதற்கென ஒரு வீட்டுக்குள் நுழைவதற்கு அல்லது குற்றம் புரிந்தபின் அந்த வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அல்லது குற்றங்கருதி வீடு புகுவதற்கு, -
1) தன்னால் அல்லது தனக்கு குற்ற உடந்தையாக உள்ள வேறு ஒரு நபரால் உண்டாக்கப்பட்ட வழியின் மூலமாக அந்த வீட்டுக்குள் நுழைவது அல்லது அந்த வீட்டிலிருந்து வெளியேறுவது.
2) தன்னையும் தனக்குக் குற்ற உடந்தையாக உள்ள நபரையும் தவிர வேறு எவருக்கும் பயன்படுத்தக் கருதாத வழியில் அந்த வீட்டுக்குள் நுழைவது அல்லது அந்த வீட்டிலியூர்ந்து வெளியே வர அல்லது சுவர் அல்லது கட்டடத்தின் மீதேறி அதன் மூலம் அந்த வழியை அடைவது.
3) தன்னால் அல்லது தனக்குக் குற்ற உடந்தையாக இருக்கும் நபரால், அந்த வீட்டின் சொந்தக்காரர் உண்டாக்க நினைக்காத ஒரு வழியை உண்டாக்கி அதன் மூலம் அந்த வழியை அடைவது.
4) குற்றம் கருதி வீடு புகுவதெற்கென வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்வது அல்லது வெளியே வருவது.
5) ஒருவரை அச்சுறுத்தி மிரட்டி அல்லது வன்செயல் மூலம் அந்த வீட்டுக்குள் குற்றங்கருதி உள்ளே புகுவது குற்றம் புரிந்த பின் வெளியே வருவது.
6) தடுக்கப்பட்டுஉள்ள (மூடப்பட்டுள்ள) வழியைத் தானாக அல்லது தனக்குக் குற்ற உடந்தையாக உள்ள நபரால் திறந்து அதன் மூலம் அந்த வீட்டுக்குள் புகுவது, வெளியே வருவது.
ஆகிய முறையைகளைக் கையாண்டு வீடு புகுதலை வலிந்து வீடு புகுதல் என்று கூறப்படும்.
விளக்கம்:
ஒரு வீட்டுக்குள் அந்த வீட்டுடன் தொடர்புள்ள மற்றொரு வீடும் (அவுட் ஹவுஸ்) அந்த வீட்டின் ஒரு பகுதியாகவே இந்தப் பிரிவில் கருதப்படும்.
உதாரணம்:
a) ஒரு வீட்டுக்குள் கன்னம் வைத்துக் கையை உள்ளே நுழைப்பதும் இந்தப் பிரிவின் கீழ் அடங்கும்.
b) ஒரு கப்பலிலுள்ள துவாரத்தின் வழியாகப் புகுவதும் அத்துமீறி வலிந்து வீடு புகுவதாகவே கொள்ளப்படும்.
c) ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே புகுவதும், அத்துமீறி வலிந்து வீடு புகுதல் ஆகும்.
d) உள்ளே தாழிடப்பட்டிருக்கும் கதவைத் திறந்து கொண்டு, அத்துமீறி புகுதலை, வலிந்து வீடு புகுதலாகக் கொள்ளப்படும்.
e) ஒரு வீட்டின் கதவிலுள்ள சந்து வழியாக ஒரு கம்பியை நுழைத்து உள்ளே வர இருக்கும் தாழ்ப்பாளைக் கொள்ளப்படும்.