எப்போதெல்லாம் ஒரு செயலினால் அல்லது ஒரு செய்வன செய்யாமையால் ஏற்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட விளைவு, அல்லது அவ்விளைவை உண்டாக்கும் ஒரு முயற்சி ஒரு குற்றமாக ஆகிறதோ, அப்போது அவ்விளைவின் பகுதியளவு ஒரு செயலினாலும் மற்றும் பகுதியளவு ஒரு செய்வன செய்யாமையாலும் ஏற்படுததப்பட்டிருக்கும்போது அதே குற்றமாக அது புரிந்துகொள்ளப்படவேண்டும்.
எடுத்துக்காட்டு
A என்பவர் Z என்பவருக்கு பகுதியளவில் சட்டவிரோதமாக உணவை கொடுக்கத் தவறுவதாலும் மற்றும் பகுதியளவில் Zஐ அடிப்பதாலும், Zன் மரணத்தை உள்நோக்கத்தில் விளைவிக்கிறார். A கொலையைப் புரிந்திருக்கிறார்.