எவரேனும், ஒரு பொதுத் தொல்லையை மீண்டும் புரியக்கூடாது அல்லது தொடரக்கூடாது என சட்டப்படியான அதிகார அமைப்பின்படி உறுத்துக் கட்டளையிட அதிகாரம் படைத்த யாரேனும் ஒரு பொதுப்பணியாளரால் அத்தகைய கட்டளையிடப்படும், அத்தகைய பொதுத் தொல்லையை மீண்டும் அல்லது தொடர்ந்து புரிந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.