எவரேனும், யாரேனும் ஒரு நபரை, ஏதாவதொரு நீர்வழிக்கலத்தின் மூலம் தண்ணீரைக் கடக்க, அத்தகைய ஒரு தன்மை அல்லது அளவுக்கதிகமான சுமை கொண்டதாக அந்நீர்வழிக்கலம் இருக்கும்போது, அதிலுள்ள அந்நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாமென்று தெரிந்தே அல்லது கவனக்குறைவாக, வாடகைக்காக ஏற்றிச் சென்றால் அல்லது ஏற்றிச் செல்ல வைத்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.