எவரேனும், ஏதாவதொரு பொது நீருற்றின் அல்லது நீர்த்தேக்கத்தின் தண்ணீரை, தன்னிச்சையாகக் களங்கப்படுத்தி அல்லது மாசுபடுத்தி, அதன்மூலம் அது எதற்காக சாதாரணமாகப் பயன்படுத்தப்படுமோ, அந்நோக்கத்திற்கான தகுதியைக் குறைக்கும் விதமாகச் செய்தால், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.