(1) எவரேனும்-
(a )ஏதாவது பொய்யான முத்திரைகளை தயாரித்தால் தெரிந்தே செலவாணியாகப் பயன்படுத்தினால், வியாபாரமாக்கினால் அல்லது விற்றால் அல்லது ஏதாவதொரு பொய்யான முத்திரையை ஏதாவதொரு அஞ்சலக நோக்கத்திற்காக தெரிந்தே பயன்படுத்தினால் அல்லது
(b )ஏதாவதொரு பொய்யான முத்திரையை, சட்டபூர்வ பிழைப்பொருத்தலின்றி அவரின் உடமையில் வைத்திருந்தால், அல்லது
(c )ஏதாவதொரு பொய்யான முத்திரையைத் தயாரிப்பதற்கான ஏதாவதொரு வார்ப்பட அச்சு, அச்சுதட்டு, உபகரணம் அல்லது பொருட்களை தயாரித்தல் அல்லது சட்டபூர்வ பிழைபொருத்தலுமின்றி, அவரின் உடமையில் வைத்திருந்தால்.
ரூபாய் இருநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும்.
(2)ஏதாவதொரு பொய்யான முத்திரை தயாரிப்பதற்கான யாரேனும் ஒரு நபரின் உடமையில் உள்ள ஏதாவதொரு அத்தகைய முத்திரை, வார்ப்பட அச்சு, அச்சுதட்டு உபகரணம் அல்லது பொருள் கைப்பற்றப்படலாம் மற்றும் கைப்பற்றப்பட்டால் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
(3)இச்சட்டப்பிரிவில் "பொய்யான முத்திரை" என்பது ஒரு அஞ்சலக விகிதத்தை குறிக்கும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்படுவதாக பொய்யாகக் காட்டப்படும் ஏதாவதொரு முத்திரை, அல்லது அநோக்கத்திற்க்காக அரசாங்கத்தால் காகிதத்தின் அல்லது மற்றவற்றின் மீது வெளியிடப்பட்ட ஏதாவதொரு முத்திரையின் ஏதாவதொரு சீரச்சுப்பதிப்பு அல்லது பொய்த்தோற்றம் அல்லது வெளிப்படுத்துதல் என பொருள்படும்.
(4)இச்சட்டப்பிரிவில் மற்றும் சட்டப்பிரிவுகள் 255 முதல் 263 வரையுள்ளவைகளிலும், இரண்டையும் உள்ளடக்கியது, அஞ்சலக கட்டண விகிதத்தைக் குறிக்கும் நோக்கத்திற்காக வெளியிடப்பட்ட முத்திரை தொடர்பாகப் பயன்படுத்துகையில், அல்லது அது சம்பந்தமாக "அரசாங்கம்"என்ற வார்த்தையானது, சட்டப்பிரிவு 17 இல் உள்ளது எதையும் கருத்தில் கொள்ளாமல், இந்தியாவின் எந்தஒரு பகுதியிலும் மற்றும் பேரரசின் தன்னுரிமை குடியேற்ற நாட்டின் எப்பகுதியிலும் அல்லது எந்தஒரு அயல்நாட்டிலும் நிர்வாக அரசாங்கத்தை நிர்வகிக்க அதிகாரமளிக்கப்பட்ட நபர் அல்லது நபர்களையும் உள்ளடக்கும் என்பதற்கு நிகராகக் கொள்ளப்பட வேண்டும்.