எவரேனும், அவரின் உடமையிலுள்ள எந்த நாணயத்தின் பொருட்டு சட்டப்பிரிவு 246 அல்லது 248இல் வரையறுக்கப்பட்டுள்ள குற்றம் புரியப்பட்டுள்ளதோ அதை அவரிடம் வைத்திருந்து மற்றும் அத்தகைய நாணயம் அவரது உடமைக்கு வந்த நேரத்திலேயே அதன்பொருட்டு அத்தகைய குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என தெரிந்தே, மோசடியாக அல்லது மோசடி செய்யப்படலாமென்ற உள்நோக்கத்துடன் அத்தகைய நாணயத்தை யாரேனும் ஒரு பிற நபரிடம் விநியோகித்தால், அல்லது யாரேனும் ஒரு பிற நபரை அதைப் பெறும்படி தூண்ட முயன்றால், ஐந்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.