எவரேனும், ஏதாவதொரு நாணயத்தின் மீது, அந்நாணயத்தின் எடையைக் குறைக்கும் அல்லது அதன் அமைப்பு முறையை மாற்றியமைக்கும் ஏதாவதொரு செய்முறையை மோசடியாக அல்லது நேர்மையின்றிச் செய்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
விளக்கம்:-ஒரு நபர் நாணயத்தின் பகுதியில் தோண்டி குழியாக்கி, அக்குழியில் ஏதாவதொன்றை வைத்தால், அவர் அந்நாணயத்தின் அமைப்பு முறையை மாற்றுகிறார்.