எவரேனும், ஒரு குற்றத்திற்கு குற்றஞ்சாட்டப்பட்டு மற்றும் பிணையாளர்கள் இல்லாமல் பிணையில் அல்லது பத்திரத்தில் விடுவிக்கப்பட்டிருக்கும் போது அப்பிணையில் அல்லது பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகளின் படி, போதிய காரணமின்றி நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறினால் (போதிய காரணமிருந்து என்பதை நிரூபிக்கும் பொறுப்பு ஆகியவற்றைச் சார்ந்தது), ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலஅளவிலான ஏதாவதொருவகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
விளக்கம்:-இச்சட்டப்பிரிவின் கீழான தண்டனையானது:-
(a ).குற்றம் புரிந்தவர் எந்தக்குற்றத்திற்க்காக அவர் குற்றஞ்சாட்டப்பட்டு, ஒரு தண்டிப்பிற்குள்ளாக வேண்டுமோ அத்தண்டனைக்கும் கூடுதலானதாகும்;மற்றும்
(b)பத்திரம் பறிமுதல் செய்யப்பட உத்தரவிடும் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குப் பாதகமின்றி அது அமையும்.