ஏதாவதொரு நிபந்தனைக்குட்பட்ட தண்டனைக் கழிப்பை ஏற்றுக்கொண்ட எவரேனும் எந்த நிபந்தனையின்பேரில் அத்தகைய தண்டனைக் கழிப்பு வழங்கப்பட்டதோ அதில் ஏதாவதொன்றைத் தெரிந்தே மீறினால், அவ்வாறு வழங்கப்பட்ட அத்தண்டனையின் ஒரு பகுதியைக் கூட அவர் அனுபவிக்கவில்லை என்றால் முதன்முதலில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அத்தண்டனையின் ஏதாவதொரு பகுதியை ஏற்கனவே அவர் அனுபவித்திருந்தால், பின்பு அவர் அனுபவிக்காமல் எஞ்சியுள்ள தண்டனையின்படி தண்டிக்கப்பட வேண்டும்.