எவரேனும், ஏதாவதொரு குற்றத்திற்கு குற்றஞ்சாட்டப்பட்டு அல்லது அதில் அவர் தண்டிக்கப்பட்டிருக்கும்போது, தான் சட்டபூர்வமாகக் கைது செய்யப்படுவதை உள்நோக்கத்துடன் எதிர்த்தால் அல்லது சட்டவிரோதமாக தடுத்தால் அல்லது ஏதாவதொரு அத்தகைய குற்றத்திற்கு ஏதாவதொரு காவலில் சட்டப்படி வைக்கப்பட்டிருக்கும் போது, தப்பிச் சென்றால் அல்லது தப்பி செல்ல முயன்றால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
விளக்கம்:-இச்சட்டப்பிரிவின்படியான தண்டனையானது, எக்குற்றத்திற்க்காக ஒருவர் கைது செய்யப்பட வேண்டுமோ அல்லது அவர் குற்றஞ்சாட்டப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளாரோ அல்லது அவர் தண்டனை அடைந்திருக்கின்றாரோ, அக்குற்றத்திற்கான தண்டனையையும் சேர்த்து கூடுதலாக இருக்கும்.