எவரேனும், யாரேனும் நபர்கள் கொள்ளை அல்லது கூட்டுக்கொள்ளையைப் புரிய இருக்கிறார்கள் அல்லது அண்மையில் புரிந்திருக்கிறார்கள் என்று தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கும்போது, உள்நோக்கத்துடன், அத்தகைய கொள்ளை அல்லது கூட்டுக்கொள்ளை புரிய உதவுவதற்கு அல்லது அக்குற்றவாளிகளை அல்லது அவர்களில் யாரேனும் ஒருவரை தண்டனையிலிருந்து தப்புவிப்பதற்கு அவர்களுக்கு அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு புகலிடம் கொடுத்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான கடுங்காவல் சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
விளக்கம்:-இச்சட்டப்பிரிவின் நோக்கங்களுக்காக, கொள்ளையோ அல்லது கூட்டுக்கொள்ளையோ இந்தியாவிற்குள் அல்லது இந்தியாவிற்கு வெளியே புரியப்பட எண்ணப்பட்டதா அல்லது புரியப்பட்டதா என்பது முக்கியமானதல்ல.
விலக்கு:-புகலிடம் அளித்தலானது குற்றம் புரிந்தவரின் கணவன் அல்லது மனைவியால் இருந்தால், அவ்வழக்கிற்கு இந்த ஷரத்து நீட்டிக்காது.