எவரேனும், இச்சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படக்கூடிய ஏதாவதொரு குற்றத்தினால் இழந்துவிட்ட ஏதாவதொரு அசையும் சொத்தை மீட்பதற்கு, யாரேனும் ஒரு நபருக்கு உதவி செய்வதாக பாவனை செய்து அல்லது உதவி செய்யும் நோக்கில் ஏதாவதொரு கையூட்டைப் பெற்றால் அல்லது ஒத்துக் கொண்டால் அல்லது பெறுவதற்கு சம்மதம் அளித்தால், குற்றம் புரிந்தவர் கைது செய்யப்பட மற்றும் அக்குற்றத்திற்கு தண்டிக்கப்பட அவரிடமுள்ள சக்தியின் கீழுள்ள அனைத்து வழிமுறைகளையும் அவர் பயன்படுத்தினால் தவிர, இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்.அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.