எவரேனும், ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில் அல்லது ஒரு பொதுப் பணியாளரிடம், அவர் பொதுப் பணியாளர் என்ற முறையில், அவரது முன்னிலையில் நடத்தப்படும் ஏதாவதொரு சட்டப்பூர்வமான செயல் நடவடிக்கையில், ஏதாவதொரு ஆவணத்தை அல்லது மின்னணுப் பதிவை சாட்சியாமாகத் தாக்கல் செய்ய சட்டப்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கும்போது, அவற்றை மறைத்தால் அல்லது அழித்தால் அல்லது மேற்கூறப்பட்டவாறு, சட்டப்படி அழைப்பாண்கள் மூலமாக அவற்றை முன்னிலைப்படுத்த அல்லது அதை அந்நோக்கத்திற்காக ஒப்படைக்க கோரப்பட்டிருக்கும்போது, அத்தகைய நீதிமன்றத்தில் அல்லது பொதுப்பணியாளர் முன்னிலையில் சாட்சியாக தாக்கல் செய்யப்படுவதை அல்லது பயன்படுத்தப்படுவதை தடுக்கும் உள்நோக்கத்தில் அத்தகைய ஆவணத்தை அல்லது மின்னணுப் பதிவை முழுவதையுமோ அல்லது ஒரு பகுதியையோ மாற்றம் செய்தால், அல்லது தெளிவாகப் படிக்க முடியாதபடி செய்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.