எவரேனும், ஒரு குற்றம் புரியப்பட்டிருப்பதாகத் தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கும்போது, அக்குற்றத்தின் பொருட்டு பொய்யென அவருக்குத் தெரிந்த அல்லது நம்புகிற ஏதாவதொரு தகவலை அளித்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
விளக்கம்:-சட்டப்பிரிவுகள் 201 மற்றும் 202 மற்றும் இச்சட்டப்பிரிவிலும், "குற்றம்" என்ற வார்த்தையானது, ஏதாவதொரு செயல் இந்தியாவிற்கு வெளியே எந்தவொரு இடத்தில் புரியப்பட்டிருந்தாலும், அது இந்தியாவிற்குள் புரியப்பட்டதாக கருதப்பட்டு சட்டப்பிரிவுகள் அதாவது, 302, 304, 382, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 402, 435, 436, 449, 450, 457, 458, 459 மற்றும் 460 ஆகிய ஏதாவதொன்றின்கீழ் எப்படி தண்டிக்கப்படுமோ, அவ்வாறான செயலையும் உள்ளடக்குகிறது.