எவரேனும், ஏதாவதொரு அத்தகைய சாற்றுரையை அதன் முக்கிய பொருளில் பொய்யாகயிருக்கின்றது எனத் தெரிந்தே, உண்மையானது போன்று நேர்மையற்ற முறையில் பயன்படுத்தினால் அல்லது பயன்படுத்த முயன்றால், அவர் பொய்சாட்சியம் அளித்ததுபோலவே அதே முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.
விளக்கம்:-ஒரு சாற்றுரையை சில ஒழுங்குமுறைப்படி இல்லை என்ற காரணத்தாலேயே மட்டும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லாவிட்டாலும் அதுவும் சட்டப்பிரிவுகள் 199 மற்றும் 200 ஆகியனவற்றின் பொருளின்படி ஒரு சாற்றுரைதான்.