எவரேனும், சட்டப்படி அளிக்க அல்லது கையொப்பமிடத் தேவையுள்ள ஏதாவதொரு சான்றிதழை, அல்லது ஏதாவதொரு பொருண்மை பற்றிய அத்தகைய சான்றிதழ் சட்டப்படி சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும்போது, அத்தகைய சான்றிதழ் முக்கியமான பொருளின் காரணமாக அது பொய்யானது என தெரிந்தோ அல்லது நம்பியோ, அளித்தால் அல்லது கையொப்பமிட்டால், அவர் பொய் சாட்சியம் அளித்தது போலவே அதே முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.