எவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளருக்கு, அல்லது அப்பொதுப் பணியாளர் அக்கறை கொண்டவர் என தாம் நம்பும் யாரேனும் ஒரு நபருக்கு, அத்தகைய பொதுப் பணியாளர் புரியும் பொதுப்பணிகளின் தொடர்புடைய ஏதாவதொரு செயலை செய்யாமலிருக்க அல்லது தாமதப்படுத்தும் நோக்கத்திற்க்காக அப்பொது பணியாளரைத் தூண்ட தீங்கு விளைவிப்பதாக ஏதாவதொரு அச்சுறுத்தலைச் செய்தால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.