எவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளர் அவரின் பொதுப்பணியை நிறைவேற்றும்போது அவருக்கு உதவி செய்ய அல்லது அளிக்க சட்டப்படி கடமைப்பட்டுள்ளபோது, உள்நோக்கத்துடன் அத்தகைய உதவியை அளிக்கத் தவறினால் ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் இருநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
மற்றும் நீதிபரிபாலன நீதிமன்றத்தால் சட்டப்படி பிறப்பிக்கப்பட்ட ஏதாவதொரு நீதித்துறை ஆணையை நிறைவேற்ற அல்லது ஒரு குற்றம் புரியப்படுவதை தடுக்க, அல்லது ஒரு கலகம் அல்லது சச்சரவை அடக்க அல்லது ஒரு குற்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது குற்றவாளியான அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலிலிருந்து தப்பியோடிவிட்ட ஒரு நபரைக் கைது செய்யும் நோக்கங்களுக்காக அத்தகைய வேண்டுகோள் சட்டப்படி அதிகாரம் கொண்ட ஒரு பொதுப் பணியாளரால் கோரப்பட்டிருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.