எவரேனும், சட்டபூர்வமான அதிகாரம் கொண்ட ஒரு பொதுப் பணியாளரால், அவர் பொதுப் பணியாளர் என்ற முறையில் நடத்தும் ஏதாவதொரு சொத்தின் விற்பனையில், ஏதாவதொரு சொத்தை யாரேனும் ஒரு நபரின் கணக்கில், அது அவருக்காகவோ அல்லது யாரேனும் பிறருக்காகாகவோ, அவ்விற்பனையில் அச்சொத்தை வாங்குவதற்கு ஒரு சட்டப்படியான தகுதியின்மையின்கீழ் அப்பிற நபர் இருக்கின்றார் என அவருக்கு தெரிந்தே ஏலத்தில் வாங்கினால் அல்லது எடுத்தால், அல்லது அந்த ஏலத்தை நடத்துகின்ற பொதுப்பணியாளர் அத்தகைய ஏலத்தை நடத்த அவர் கொண்டுள்ள கடப்பாடுகளுக்கு மாறான உள்நோக்கத்துடன் அத்தகைய சொத்தை ஏலத்தில் எடுத்தால், ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் இருநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.