எவரேனும் சட்டப்படி அதிகாரம் கொண்ட ஒரு பொதுப் பணியாளரால், உண்மையைக் கூற ஒருவர் தன்னை ஆட்படுத்திக்கொள்ள வேண்டுமென பணிக்கப்படும்போது, உண்மையைக் கூற, ஒரு சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிமொழிக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதை மறுத்தால் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.