எவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளரிடம், அவர் பொதுப் பணியாளர் என்ற முறையில், ஏதாவதொரு ஆவணத்தை அல்லது மின்னணுப் பதிவை தர அல்லது ஒப்படைக்க சட்டப்படி கடப்பாடு கொண்ட உள்நோக்கத்துடன் அதை அவ்வாறு தர அல்லது ஒப்படைக்கத் தவறினால், ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
அல்லது அந்த ஆவணம் அல்லது மின்னணுப்பதிவு ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில் தர அல்லது ஒப்படைக்க வேண்டியதாயிருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டு
A என்பவர் ஒரு மாவட்ட நீதிமன்றம் முன்பு, ஒரு ஆவணத்தை ஒப்படைக்க சட்டப்படி கடமைப்பட்டிருந்தும், அதை ஒப்படைக்க தவறுகிறார்.A இச்சட்டப்பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தைப் புரிந்திருக்கிறார்.