எவரேனும், பொதுப் பணியாளர் என்ற முறையில் சட்டப்பூர்வமாக, ஒரு அழைப்பாணை, அறிவிக்கை அல்லது உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் கொண்ட யாரேனும் ஒரு பொதுப் பணியாளர் பிறப்பிக்கும் அத்தகைய அழைப்பாணை, அறிவிக்கை அல்லது உத்தரவு ஆகிய ஏதாவதொன்றை தன்னிடம் சார்பு செய்யப்படுவதைத் தவிர்க்க தலைமறைவானால், ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டனையுடன் அல்லது ஐநூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
அல்லது, அழைப்பாணை அல்லது அறிவிக்கை அல்லது உத்தரவு, ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில் அவர் நேரடியாகவோ அல்லது அவரது முகவர் மூலமாகவோ முன்னிலையாக வேண்டுமென்றோ அல்லது ஒரு ஆவணத்தையோ அல்லது மின்னணுப் பதிவையோ முன்னிலைப்படுத்தவேண்டுமென்றோ இருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கபடக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.