எவரேனும் ஒரு தேர்தலில் ஒரு வாக்குசீட்டுக்காக விண்ணப்பித்தால் அல்லது உயிரோடிருக்கும் அல்லது இறந்து போன யாரேனும் ஒரு பிற நபரின் பெயரில், அல்லது ஒரு போலியான பெயரில் வாக்களித்தால், அத்தகைய தேர்தலில் ஒரு தடவை வாக்களித்தும், அதே தேர்தலில் அவருடைய சொந்தப் பெயரிலேயே ஒரு வாக்குசீட்டுக்கு விண்ணப்பித்தால், மற்றும் எவரேனும், ஏதாவதொரு அத்தகைய வழியில் யாரேனும் ஒரு நபரிடமிருந்து வாக்கைப் பெறத் தூண்டினால், பெற்றால் அல்லது பெற முயன்றால், ஒரு தேர்தலில் ஆள்மாறட்டக் குற்றத்தைப் புரிகிறார்;
இருப்பினும், தற்போது அமலிலுள்ள ஏதாவதொரு ஒரு சட்டத்தின்கீழ், ஒரு வாக்காளருக்குப் பதிலாளாக வாக்களிக்க அதிகாரம் பெற்ற ஒரு நபருக்கு, அவர் அத்தகைய வாக்காளருக்குப் பதிலாக வாக்களிக்கும் வரையில், இச்சட்டப் பிரிவில் உள்ள எதுவும் பொருந்தாது.