ஒரு பொதுப்பணியாளராக இருக்கும் எவரேனும், மற்றும் அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில் குறிப்பிட்ட சொத்தை வாங்கக்கூடாது அல்லது ஏலத்தில் எடுக்கக்கூடாது என சட்டப்படி கடமைப்பட்டிருக்கும் போது, அச்சொத்தை அவரின் சொந்தப் பெயரிலோ அல்லது மற்றொருவரின் பெயரிலோ அல்லது கூட்டாகவோ அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து பங்குதாரராகவோ வாங்கினால் அல்லது ஏலத்தில் எடுத்தால், இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்; மற்றும் அச்சொத்து வாங்கப்பட்டிருந்தால், பறிமுதல் செய்யப்பட வேண்டும்.