ஒரு பொதுப் பணியாளராக இருக்கின்ற எவரேனும், அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில், ஏதாவதொரு ஆவணத்தை அல்லது மின்னணுப் பதிவைத் தயாரிக்க அல்லது மொழிமாற்றம் செய்ய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்ற போது, அந்த ஆவணத்தை அல்லது மின்னணுப் பதிவை அது தவறானது என அவருக்குத் தெரிந்தோ அல்லது அவர் நம்பியோ, யாரேனும் ஒரு நபருக்குத் தீங்கு அதனால் அவர் அநேகமாக விளைவிக்கலாமென்ற உள்நோக்கத்தில் அல்லது அதனால் அவர் அநேகமாக விளைவிக்கலாமென்று தெரிந்தே வடிவமைத்தால், தயாரித்தால் அல்லது மொழிமாற்றம் செய்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு கால அளவிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.