ஒரு பொதுஊழியர் மூலம் ஒருவருக்கு ஒரு காரியம் நடைபெற இருக்கிறது. இதனை அந்த பொது ஊழியர் அறிவார். இந்த நிலையில் அவர் அந்த நபரிடம் இருந்து விலை கொடுக்காமல் ஒரு விலை மதிப்புள்ள பொருளை பெறுவது குற்றமாகும். அந்த பண்டத்திற்கு உரிய விலையைவிட மிகவும் குறைந்த விலைக்கு அந்த பண்டத்தை பெறுவதும் குற்றம். அவர் அந்தப் பொருளை தனக்காக பெறுவதும் அல்லது தனக்கு வேண்டிய வேறு ஒருவருக்காக பெறுவதும் குற்றமாகும். தன்னுடைய மேலதிகாரியின் மூலம் ஒரு காரியம் அந்த நபருக்கு ஆகவேண்டிய நிலையில் அப்படி பெறுவது குற்றமாகும். மேற்கூறியவாறு அந்த பொருளை சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து பெறாமல், அந்த நபருக்கு வேண்டியவர் அல்லது சொந்தக்காரரிடம் இருந்து அப்படிப் பெறுவதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
உதாரணம்:
தாஸ் என்பவர் ஒரு நீதிபதி, அவருடைய நீதிமன்றத்தின் ராமன் என்பவருடைய வழக்கு நடைபெற்று வருகிறது. அங்கே அரசாங்க கடன் பத்திரம் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. தாஸ் என்ற நீதிபதி இந்த பிரிவின் கீழ் குற்றவாளியாய் ஆகின்றார். பொதுப் பணியாளரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்லது அலுவல் செயல்பாட்டில் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து, அத்தகைய பொதுப் பணியாளர் மதிப்புள்ள பொருளை உரிய விலையின்றிப் பெறுதல்[ஊழல் தடுப்பு சட்டம், 1988(49/1988)இன் சட்டப்பிரிவு 31இன் படி நீக்கப்பட்டது.அமலுக்கு வந்த நாள்:09.09.1988.]