161 அல்லது 165-ஆவது பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றத்தை பிறர் புரிவதற்கு உடந்தையாக அல்லது தூண்டுதலாக யார் இருந்தாலும் அவர் குற்றம் புரிகின்றவராகிறார். உடந்தையாக இருந்ததன் விளைவாக அந்தக் குற்றம் நடைபெறாமல் இருந்தாலும் பாதகம் இல்லை. அப்போதும் உடந்தையாக இருந்தவரை குற்றவாளி என்று கருதி அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
சட்டப் பிரிவு 161 அல்லது சட்டப் பிரிவு 165இல் பொருள் விளக்கப்பட்ட குற்றங்களின் தூண்டுதலுக்கான தண்டனை[ஊழல் தடுப்பு சட்டம், 1988(49/1988)இன் சட்டப்பிரிவு 31இன் படி நீக்கப்பட்டது.அமலுக்கு வந்த நாள்:09.09.1988.]