ஒரு கழகத்தை அடக்க முற்படும் அரசாங்க அதிகாரியை எதிர்ப்போர், தடுப்போர், எதிர்த்து வன்செயல்புரிவோர் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். கலகம் முதலானவற்றை அடக்கும் போது, பொதுப் பணியாளரைத் தாக்குதல் அல்லது தடுத்தல்எவரேனும், யாரேனும் ஒருப் பொதுப்பணியாளரை, அத்தகைய பொதுப்பணியாளர் என்ற முறையில் அவரின் கடமையை ஆற்றுகையில், ஒரு சட்டவிரோதமான கும்பல் கலைந்து செல்வதற்கு, அல்லது ஒரு கலகம் அல்லது சச்சரவை அடக்குவதற்கான பெருமுயற்சியில், தாக்கினால் அல்லது தாக்குவதற்கு அச்சுறுத்தினால், அல்லது தடுத்தால் அல்லது தடுப்பதற்கு முயன்றால் அல்லது குற்றமுறு பலப் பிரயோகத்தை பயன்படுத்தினால், அல்லது அச்சுறுத்தினால் அல்லது முயன்றால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப் பட வேண்டும்.