சட்டவிரோதமான கூட்டத்தைச் சேர்ந்த நபர்களில் யார் எந்தக் குற்றத்தைப் புரிந்தாலும் அப்பொழுது அந்தச் சட்டவிரோதமான கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் அந்தக் குற்றத்தில் நேரடிப் பங்கு உண்டு. அவர்கள் அதற்கேற்ற தண்டனையைப் பெறவேண்டும். பொதுவான நோக்கத்தை நிறைவேற்றும் போது புரியப்பட்ட குற்றத்திற்கு, சட்டவிரோதமான கும்பலின் ஒவ்வொரு உறுப்பினரும் குற்றவாளியாவார்ஒரு சட்டவிரோதமான கும்பலின் பொதுவான நோக்கத்தை நிறைவேற்றுகையில், அந்த கும்பலின் யாரேனும் ஒரு உறுப்பினரால், அல்லது அந்த நோக்கத்தை நிறைவேற்றுகையில் அநேகமாகப் புரியப்படக் கூடும் என அந்த கும்பலின் அத்தகைய உறுப்பினர்களுக்குத் தெரிந்தே ஒரு குற்றம் புரியப்பட்டால், அக்குற்றம் புரியப்படும் நேரத்தில் அதே கும்பலில் ஒரு உறுப்பினராகயிருக்கும் ஒவ்வொரு நபரும், அக்குற்றத்திற்குக் குற்றவாளியாகிறார்.