எவரேனும் இந்திய அரசாங்கத்தின் தரைப்படை, கடற்படை அல்லது விமானப் படை பணியிலுள்ள ஒரு தரைப் படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப் படைவீரராக இல்லாத போது, அவர் அத்தகைய ஒரு தரைப் படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப் படை வீரர் என்று நம்பவைக்கும் உள்நோக்கத்துடன், அத்தகைய ஒரு தரைப் படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப் படை வீரர் பயன்படுத்துகிற ஏதாவதொரு சீருடையை அணிந்தால் அல்லது ஏதாவதொரு சின்னத்தை கொண்டு சென்றால், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப் படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது ஐநூறு ரூபாய் வரை நீட்டிக்கப் படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.