எவரேனும் இந்திய அரசாங்கத்தின் தரைப் படை, கடற்படை அல்லது விமானப்படையில் ஒரு அலுவலர், தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரால் யாரேனும் ஒரு மேனிலை அலுவலரின் மீது அவன் அலுவலகப் பணியாற்றும்போது ஒருத்தாக்குதலைத் தூண்டி, அத்தூண்டுதலின் விளைவில் அத்தகைய தாக்குதல் புரியப்பட்டால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.