எவரேனும், ஏதாவதொரு ஒரு செயலினால் அல்லது ஏதாவதொரு சட்டவிரோதமான செய்வனச் செய்யாமையால், இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுப்பதற்கான ஒரு திட்டம் இருப்பதை மறைத்து, அத்தகைய மறைத்தலானது, அத்தகைய போர் தொடுத்தலுக்கு உதவியாக அமையுமென்ற உள்நோக்கத்தில் அல்லது அத்தகைய மறைத்தலானது உதவி செய்யக்கூடுமென்று தெரிந்தே மறைத்தால், பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.