எவரேனும், பெரும்பாலும் பொதுமக்களால் அல்லது பத்திற்கும் மேற்பட்ட ஏதாவதொரு எண்ணிக்கை அல்லது பிரிவின் நபர்களால் ஒரு குற்றம் புரியப்படுவதைத் தூண்டிவிட்டால் மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டு
A என்பவர், ஒரு ஊர்வலத்தில் ஈடுபட்டிருக்கையில் ஒரு எதிர்தரப்பு பிரிவின் உறுப்பினர்களைத் தாக்கும் நோக்கத்திற்காக, ஒரு குறிப்பிட்ட நேரம் மற்றும் இடத்தில் கூடுவதற்கு, பத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பிரிவினரைத் தூண்டுவதற்கு ஒரு சுவரொட்டியை ஒரு பொது இடத்தில் ஒட்டுகிறார்.இச்சட்டப்பிரிவில் பொருள் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தை A புரிந்திருக்கிறார்.