மேலே குறிப்பிட்டுள்ள குற்றங்களின்றி திருட்டு, தொல்லை தருதல், வரம்பு மீறல் ஆகிய குற்றங்களை பிறர் செய்தாலும், செய்ய முயற்ச செய்தாலும் தற்காப்பு என்று முயற்சி செய்தாலும் தற்காப்பு என்று மரணத்தை தவிர வேறு எந்த தீங்கை வேண்டுமானாலும் எதிரிக்கு செய்யலாம். வேண்டுமென்றே மரணம் சம்பவிக்கும்படி மட்டும் செய்யக் கூடாது. அத்தகைய உரிமை, மரணம் அல்லாத ஏதாவதொரு பிற தீங்கை விளைவிப்பதற்கு எப்போது நீட்டிக்கிறதுஅக்குற்றமானது, கடைசி முந்தைய சட்டப்பிரிவில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள விவரிப்புகளில் ஏதாவதொன்றின்கீழ் இல்லாத குற்றமாகவும், அதைப்புரிவதற்கு அல்லது அதைப்புரிய முயற்சிப்பதற்கு, தனிநபர் தற்காப்பு உரிமையை பயன்படுத்துகிற சூழ்நிலைகளிலான திருட்டு, வன்குறும்பு அல்லது குற்றமுறு அத்துமீறலாக இருந்தால், அந்த உரிமையானது, மரணத்தை தன்னிச்சையாக விளைவிப்பதற்கு நீட்டிக்காது.ஆனால் சட்டப்பிரிவு 99 இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, அந்த தவறு இழைப்பவருக்கு மரணம் அல்லாத, பிற ஏதாவதொரு தீங்கை தன்னிச்சையாக விளைவிப்பதற்கு நீட்டிக்கிறது.