கடைசி முந்தைய சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் கீழ், இதன்பின்பு வரிசைப்படுத்தப்பட்ட விவரிப்புக்களில் ஏதாவதொன்றில் உரிமையைப் பயன்படுத்தும் சூழ்நிலைகளிலான குற்றமாக இர்ருந்தால், தாக்குபவற்கு மரணம், அல்லது ஏதாவதொரு பிற தீங்கை தன்னிச்சையாக விளைவிப்பதற்கு, உடலிற்கான தனிநபர் தற்காப்பு உரிமை நீடிக்கிறது, அவையாவன:-
முதலாவது:-அத்தகைய தாக்குதலால், மற்றபடியாக மரணம் அதன் விளைவாக இறக்கும் என்ற எதிர்பார்ப்பு அச்சத்தை நியாயமாக எற்படுத்தலாம் என்று அத்தகைய ஒரு தாக்குதல்.
இரண்டாவதாக:-அத்தகைய தாக்குதலால், மற்றபடியாக கொடுங்காயம் அதன் விளைவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அச்சத்தை நியாயமாக எற்படுத்தலாம் என்று அத்தகைய ஒரு தாக்குதல்.
மூன்றாவதாக:- பாலியல் வல்லுறவு புரியப்படும் உள்நோக்கத்துடனான ஒரு தாக்குதல்.
நான்காவதாக:- இயற்க்கைக்கு மாறான காம இச்சையைத் தணித்துக்கொள்ளும் உள்நோக்கத்துடனான ஒரு தாக்குதல்.
ஐந்தாவதாக :-கவர்ந்து கடத்தல் அல்லது வன்கடத்தலுக்கான உள்நோக்கத்துடனான ஒரு தாக்குதல்.
ஆறாவதாக :- ஒரு நபர் அவரின் விடுதலைக்காக, பொது அதிகார அமைப்பினரிடம் உதவிகோரி பெறுவதற்கு, அவர் இயலாதவராக இருப்பதாக எதிர்பார்ப்பு அச்சத்தை அவருக்கு நியமாக ஏற்படுத்தலாமென்ற அத்தைகைய சூழ்நிலைகளின்கீழ் ஒரு நபரை முறையின்றி அடைத்து வைக்கும் உள்நோக்கத்துடனான ஒரு தாக்குதல்.
ஏழாவதாக :- அத்தகைய செயலின் விளைவாக, மற்றபடியாக கொடுங்காயம் ஏற்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு அச்சத்தை நியாயமாக ஏற்படுத்தலாம் என்ற, அமிலத்தை வீசும் அல்லது கொடுக்கும் அல்லது அமிலத்தை வீசுவதற்கு அல்லது கொடுப்பதற்கான ஒரு முயற்ச்சியிலான ஒரு செயல்.